சென்னை: தமிழகம், கேரளாவில் ரயில்வே திட்ட பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் மொத்தம் 12 ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.727 கோடியை தெற்கு ரயில்வே திரும்ப ஒப்படைத்ததாக அண்மையில் தகவல் வெளியாகின. இதற்கு தெற்கு ரயில்வே ஏற்கெனவே விளக்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகம், கேரளாவில் ரயில்வே திட்ட பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.