மோசடி புகாரில் கைதான தேவநாதன் யாதவ் சொத்துகளை தற்காலிகமாக முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

3 months ago 12

நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டதாக கைதான தேவநாதன் யாதவ் உள்ளிட்டோரின் சொத்துகளை தற்காலிகமாக முடக்கி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த 'தி மயிலாப்பூர் இந்து பெர்மணென்ட் ஃபண்ட்' என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி வசூலித்து மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குநரான தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் உள்ளிட்டோர் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவுப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Read Entire Article