மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை: நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

4 months ago 25

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, காட்டாறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைகள் மற்றும் கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இருந்தபோதும் மலைப்பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் ஆறுகள் மற்றும் ஓடைகள் வறண்டு காணப்பட்டது.

Read Entire Article