சென்னை : மேட்டூரில் ஜூன் 11ல் முதலமைச்சர் ரோடு ஷோ நடத்த உள்ளதாக அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “காவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறப்பதற்காக மேட்டூர் வரும் முதலமைச்சர் நவப்பட்டி பெரும்பள்ளம் பகுதிகளில் ரோடு ஷோ நடத்துகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 11 கி.மீ. தூரத்திற்கு வரவேற்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.”இவ்வாறு தெரிவித்தார்.
The post மேட்டூரில் ஜூன் 11ல் முதலமைச்சர் ரோடு ஷோ நடத்த உள்ளார் – அமைச்சர் ராஜேந்திரன் appeared first on Dinakaran.