மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அமைச்சர் சாமிநாதன்: மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

2 months ago 12

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே கார் விபத்தில் சிக்கியவர்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (46). இவர், தனது குடும்பத்தினருடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் இல்லத்திற்கு வந்து விட்டு நேற்று முன்தினம் இரவு மீண்டும் கோத்தகிரி நோக்கி தனது காரில் சென்றுள்ளார்.

அப்போது, பவானிசாகர் அணை வியூ பாயிண்ட் அருகே சென்று கொண்டிருந்த போது நிலைத்தடுமாறி கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதேவேளையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து திருப்பூர் செல்வதற்காக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தனது காரில் மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, விபத்தில் கார் சிக்கியதை பார்த்தவுடன் தனது காரை விட்டு இறங்கிய அமைச்சர் சாமிநாதன் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவருக்கும் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதால், சிகிச்சைக்கு பின்னர் அனைவரும் வீடு திரும்பினர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அமைச்சர் சாமிநாதன்: மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article