மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இரு முறை குப்பைகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை

7 months ago 43

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரைகளில் தினமும் 2 வேளையும் இயந்திரங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியுள்ளார்.

ஆசியாவின் 2-வது பெரிய கடற்கரையாக மெரினா விளங்குகிறது. சென்னை மாநகருக்கு கல்வி, வேலை, குடும்ப சுப நிகழ்ச்சிகள் நிமித்தமாக வருவோர், மெரினா கடற்கரைக்குச் செல்லாமல் சொந்த ஊர் திரும்புவதில்லை. அந்த அளவுக்கு உள் நாட்டினர் மட்டுமல்லாது வெளிநாட்டினரையும் மெரினா கடற்கரை வெகுவாக கவர்ந்துள்ளது. இக்கடற்கரைக்கு தினமும் குறைந்தப் பட்சம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். விழாக்காலங்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் வந்து செல்கிறார்கள்.

Read Entire Article