சென்னை: மெட்ரோ ரயில் பயணிகள் ஏப்.1-ம் தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (சிங்கார சென்னை அட்டை) மாற வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆலந்தூர் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பழைய பயண அட்டையின் பயன்பாட்டை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுப்பதற்காக கவுன்ட்டர்களில் பயணிகள் வரிசையில் நெடுநேரம் காத்திருப்பதை தவிர்க்க, சிஎம்ஆர்எல் பயண அட்டை கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் இந்த அட்டையை பயன்படுத்தும்போது, 20 சதவீதம் கட்டண தள்ளுபடி கிடைக்கும்.