மெகா சூதாட்டம்: 11 பேர் கைது

9 hours ago 4

 

திருப்பூர், ஏப்.28: திருப்பூர் 15.வேலம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது 15.வேலம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் சிலர் அமர்ந்திருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். இதில் அவர்கள் சிக்கண்ணா காலேஜ் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி (45), கொங்கணகிரி பகுதியைச் சேர்ந்த கிரகேந்திரன் (47), அணைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (48) உள்ளிட்ட 11 பேர் என்பதும் அவர்கள் அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.13 ஆயிரம் பணம் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

The post மெகா சூதாட்டம்: 11 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article