மூலகொத்தளம் பகுதியில் 2 வளர்ப்பு நாய்கள் கடித்து ஆட்டோ டிரைவர் படுகாயம் : வீடியோ வைரல்

1 day ago 5

தண்டையார்பேட்டை, ஜூன் 4: மூலகொத்தளம் பகுதியில் ஆட்டோ டிரைவரை, 2 நாய்கள் விரட்டி விரட்டி கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மூலக்கொத்தளம் சிதம்பரம் நகரை சேர்ந்தவர் முத்து (43), ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு சவாரி முடிந்து, வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்திய முத்து, கீழே இறங்கியுள்ளார். அப்போது 2 சிறுவர்கள் அழைத்து வந்த 2 வளர்ப்பு நாய்கள், திடீரென முத்து மீது பாய்ந்து கடித்துக் குதறியது. அதிர்ச்சியடைந்த அவர் அலறி கூச்சலிட்டபடி ஓட்டம் பிடித்தார். ஆனாலும், அந்த நாய்கள் விரட்டி விரட்டி கடித்தது.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அந்த நாய்களை விரட்டிவிட்டு முத்துவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் முத்துவுக்கு சிகிச்சை அளித்தனர். புகாரின் பேரில், வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்ததில், மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாய்கள் என்பதும், அவரது மகன்கள் வாக்கிங் அழைத்துச் சென்றபோது முத்துவை கடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நாய்கடி சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆட்டோ டிரைவர் முத்துவை, 2 வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post மூலகொத்தளம் பகுதியில் 2 வளர்ப்பு நாய்கள் கடித்து ஆட்டோ டிரைவர் படுகாயம் : வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Read Entire Article