சென்னை: மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் காலமானார். அவருக்கு வயது 91. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காவல் துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்(91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ம் ஆண்டு பிறந்த சேதுராமன், சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். விருகம்பாக்கம் சின்மயா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு மகன்கள் திருவள்ளுவர், கவியரசன், ஆண்டவர், தமிழ் மணிகண்டன், மகள் பூங்கொடி உள்ளனர்.