முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை: நீர்வரத்து 80,984 கனஅடியாக உயர்வு

1 day ago 2

மேட்டூர் / தருமபுரி: நீர்​வரத்து விநாடிக்கு 80,984 கனஅடி​யாக உயர்ந்​துள்ள நிலை​யில், மேட்​டூர் அணை விரை​வில் முழு கொள்​ளளவை எட்டி உபரிநீர் திறக்​கப்பட வாய்ப்​புள்​ள​தால், 11 மாவட்​டங்​களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

கர்​நாட​கா​வில் கனமழை காரண​மாக கபினி, கேஆர்​எஸ் அணை​கள் நிரம்​பி, உபரிநீர் காவிரி​யில் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இதனால் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. நேற்று முன்​தினம் மாலை விநாடிக்கு 60,740 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 73,452 கனஅடி​யாக​வும், மாலை​யில் 80,984 கனஅடி​யாக​வும் உயர்ந்​தது. அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு நேற்று காலை 22,500 கனஅடியி​லிருந்து 26,000 கன அடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

Read Entire Article