“முருக பக்தர்கள் மாநாடு... விரதம் இருக்கும் சேகர்பாபுவுக்கு நன்றி!” - இந்து முன்னணி தலைவர்

4 hours ago 2

தேவகோட்டை: “முருக பக்தர்கள் மாநாட்டுக்கு கூட்டம் வரக் கூடாது என்பதற்காக அமைச்சர் சேகர்பாபு விரதம் இருக்கிறார். மாநாட்டுக்காக பலர் விரதம் இருக்கின்றனர். ஏதோவொரு வகையில் சேகர்பாபு விரதம் இருப்பதற்காக நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்,” என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ்களை கொடுக்க இன்று (ஜூன் 19) சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இந்துக்கள், இந்து இயக்கங்கள் இணைந்து முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துகிறோம். இதை தடுக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

Read Entire Article