மதுரை: “முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும், நல்லவர்கள் மக்கள் பணியாற்றும் நிலையை ஏற்படுத்தும்.” என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் வண்டியூர் டோல்கேட் அருகே நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இன்று தரிசனம் செய்தார். அப்போது முன்னாள் எம்.பி உடையப்பன், முன்னாள் எம்எல்ஏ கேஎஸ்கே.ராஜேந்திரன், மாவட்டத் தலைவர்கள் ராஜாங்கம், பாலசுப்பிரமணியன், மாநில தொண்டரணி அமைப்பாளர் அயோத்தி ஆகியோர் பங்கேற்றனர்.