திருச்சி: மும்மொழி கொள்கையை ஒரு போதும் ஏற்க மாட்டோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடிப்படை வசதிகள் அனைத்தையும் தரமாக அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளோம். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை அகற்றி அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்படும் என கூறப்படும் தகவல்கள் வதந்தி. எப்போதும் போல் செயல்படும். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை.
பட்ஜெட்டில் கூட தமிழ்நாடு என்ற பெயர் இல்லை. மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்து விட்டோம். அதனால் தான் ஒன்றிய அரசு நிதி வழங்க மறுக்கிறது. திருச்சி பறவைகள் பூங்கா கட்டணம் விலை குறைப்பு குறித்து கலெக்டர் முடிவு எடுப்பார். மீண்டும் திராவிட மாடல் தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post மும்மொழி கொள்கையை ஒரு போதும் ஏற்க மாட்டோம்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி appeared first on Dinakaran.