மும்மொழி கொள்கையை எதிர்ப்பதால்தான் அமலாக்கத் துறை சோதனை: துணை முதல்வர் உதயநிதி குற்றச்சாட்டு

1 week ago 2

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அரசு துறை அலுவலர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் உதயநிதி கூறியது: ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், எம்.பி., எம்எல்ஏக்கள் விடுத்த கோரிக்கைகளின்படி சாலைகள் அமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல், வாய்க்கால் கல்வெட்டு கட்டுதல், பாலம் கட்டுதல், சமுதாய நலக்கூடம் அமைத்தல், அரசு மருத்துவமனையை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.80 கோடி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

Read Entire Article