மும்பை அடுத்த தானேவில் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்து 6 பயணிகள் பேர்உயிரிழப்பு

2 hours ago 3

மும்பை: மும்பை அடுத்த தானேவில் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்து 6 பயணிகள் பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸிலிருந்து தானேவின் கசாரா பகுதியை நோக்கிச் புறநகர் ரயில் சென்றுள்ளது. இன்று பணிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்வதற்காக அதிக அளவில் மக்கள் ரயில் ஏறியுள்ளனர். இந்த நிலையில் அதிக கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் கதவுகளைப் பிடித்துக் கொண்டு பயணித்துள்ளனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக பயணிகள் சிலர் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தனர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விபத்து தொடர்பாக ரயில்வே, காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

The post மும்பை அடுத்த தானேவில் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்து 6 பயணிகள் பேர்உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article