வீரகனூர் பேரூராட்சி 13வது வார்டை சேர்ந்தவர் மருதமுத்து(80). இவருக்கும் சொக்கனூர் பூதாவனம்தோப்பு பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி(56) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி மருதமுத்து, தோட்டத்தில் ஆடு மேய்க்கும் பொழுது, சின்னத்தம்பி அவரிடம் தகராறு செய்து, அவரை செருப்பால் அடித்துள்ளார். இதில் காயமடைந்த மருதமுத்து கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வீரகனூர் எஸ்ஐ தினேஷ்குமார் விசாரணை நடத்தி, சின்னத்தம்பி மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தார்.
The post முதியவரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.