“முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது” - வி.வி.ராஜன் செல்லப்பா கணிப்பு

6 months ago 18

மதுரை: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது’’ என்று அதிமுக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்தது. பகுதி செயலாளரும், மாவட்ட இளைஞர் அணி செயலாளருமான வழக்கறிஞர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வைத்தார். புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேசியதாவது: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு மக்கள் மத்தியில் நிறைவேற்றப்பட்டது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகிறார். திமுகவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால்தான் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்து விட்டது.

Read Entire Article