முதல் டெஸ்ட் தோல்வி: தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியது என்ன..?

6 hours ago 2

லீட்ஸ்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. இது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அத்துடன் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த தோல்வி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் பேசுகையில், "கேட்சுகள் தவற விடப்படும். உலகின் சிறந்த வீரர்களும் கேட்சுகளை விட்டுள்ளார்கள். அவர்களில் யாரும் வேண்டுமென்றே அதைச் செய்யவில்லை. ஆம் பேட்டிங் பொறுத்த வரை எங்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முதல் இன்னிங்சில் 40 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்த நாங்கள் 2வது இன்னிங்சில் 30 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை விட்டோம். முதல் இன்னிங்சில் 600 ரன்கள் எடுக்க வாய்ப்பு கிடைத்தபோது, நாங்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்கக்கூடிய சூழ்நிலையில் இருந்தோம்.

ஆனால் கிரிக்கெட்டில் இதெல்லாம் நடக்கக் கூடியதாகும். இதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு முன்னேறுவோம் என்று நம்புகிறேன். ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், இந்த டெஸ்ட் போட்டியில் எங்களுக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் நாங்கள் அதை தக்கவைத்துக்கொள்ள தவறிவிட்டோம்.

ஒவ்வொரு தோல்வியும் மோசமானது. அது இளம் அணியா அல்லது அனுபவம் வாய்ந்த அணியா என்பது முக்கியமல்ல. அது ஒரு இந்திய அணி. நாங்கள் 140 கோடி இந்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், தோல்விக்கு சாக்குப்போக்கு சொல்லக்கூடாது" என்று கூறினார்.

Read Entire Article