
பல்லகலே,
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இலங்கை கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று ஆரம்பமாகிறது.
அதன்படி இலங்கை - வங்காளதேசம் இடையிலான முதல் டி20 போட்டி பல்லகலேவில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலன்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.