சென்னை: முதலமைச்சர் தலைமையிலான திஷா கமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்வது வாடிக்கைதான் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையில் சிலர் வேறு மாதிரி பேசுவதாக செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். கொப்பரை தேங்காய்க்கு விலை குறைவாக உள்ளதால் அதற்கு மானியம் தர கடந்த கூட்டத்தில் கேட்டிருந்தேன். கடந்த முறை தான் விடுத்த கோரிக்கைக்கு இந்த முறை முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
The post முதலமைச்சர் தலைமையிலான திஷா கமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்வது வாடிக்கைதான்: கே.ஏ.செங்கோட்டையன் appeared first on Dinakaran.