முட்டுக்காட்டில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி: ஒன்றிய இணை அமைச்சர் பங்கேற்பு

1 week ago 3

திருப்போரூர்: சென்னை அருகே முட்டுக்காட்டில் மாற்றுத்திறனாளிகள் நிறுவனத்தில், மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு பேரணியை ஒன்றிய இணை அமைச்சர் பி.எல்.வர்மா தொடங்கி வைத்தார். அணுகக்கூடிய இந்திய பிரச்சாரம் என்பது இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு துறை, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டுள்ள ஒரு திட்டம்.

இந்த, திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த கட்டிடங்களின் வடிவமைப்பு மற்றும் மனிதவள கொள்கைகளை அளவிடுவதற்கான ஒரு குறியீட்டுடன் வருகிறது. இந்த, முதன்மை திட்டம் டிசம்பர் 3, 2015 அன்று, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று பிரதமரால் தொடங்கப்பட்டது. திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை முட்டுக்காட்டில் இயங்கி வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் சுகம்யா யாத்ரா என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியினை ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் இணை அமைச்சர் பி.எல்.வர்மா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நிறுவன இயக்குநர் நசிகேதா ரவுட், துணைப்பதிவாளர் காமராஜ், இயன்முறை மருத்துவர் சந்தோஷ் கண்ணா, மாதிரி சிறப்பு பள்ளி முதல்வர் தனவேந்தன் மற்றும் மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், பெற்றோர், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post முட்டுக்காட்டில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி: ஒன்றிய இணை அமைச்சர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article