முகிழ்த்தகம் ஊராட்சியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க மக்கள் கோரிக்கை

6 months ago 18

தொண்டி, டிச. 21: தொண்டி அருகே உள்ள முகிழ்த்தகம் ஊராட்சியில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். தொண்டி அருகே உள்ள முகிழ்த்தகம் ஊராட்சிக்கு குளத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் குழாய் உடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடுமையான சிரமம் அடைந்துள்ளனர். அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை. இதேபோல், திருவெற்றியூர், காரங்காடு, குளத்தூர், முள்ளிமுனை, புதுப்பட்டினம் ஊராட்சிகளும் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து முருகேசன் கூறியது, 15 நாள்களுக்கு மேலாக தண்ணீர் வரவில்லை. கண்மாய் நீரைத்தான் பயன்படுத்துகிறோம். டேங்கர் தண்ணீரும் கிடைக்கவில்லை. இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

The post முகிழ்த்தகம் ஊராட்சியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article