ஒடுகத்தூர், ஏப்.26: ஒடுகத்தூர் அருகே ஆற்றில் போடப்பட்டிருந்த மீன் வலையில் சிக்கிய 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு அருகே உள்ள கல்லாபாறை கிராமத்தில் சில இளைஞர்கள் அங்குள்ள ஆற்றில் மீன் பிடிப்பதற்காக நேற்று முன்தினம் மாலை வலை போட்டு இருந்தனர். தொடர்ந்து, நேற்று காலை வலையை எடுக்க ஆற்று பகுதிக்கு சென்றனர். அப்போது, மீன் வலையில் ஏதோ சிக்கி தத்தளித்து கொண்டு இருந்தது. அருகே சென்று பார்த்தபோது வலையில் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு சிக்கிக்கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனச்சரகர் அலுவலர் வெங்கடாசலம் மற்றும் வனக்காப்பாளர்கள் இன்பராஜ், அஜித்குமார், வெங்கடேசன் ஆகியோர் மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர், மீட்கப்பட்ட பாம்பை அருகே உள்ள கருத்தமலை காப்புக்காட்டில் கொண்டு சென்று பத்திரமாக விட்டனர்.
The post மீன் வலையில் சிக்கிய 10 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையினர் மீட்டனர் appeared first on Dinakaran.