காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த மீனவர்களை கடந்த மாதம் 27ம் தேதி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர். இந்த சம்பவத்தை கண்டிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 11 கிராம மீனவர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.இதற்கு காரைக்கால் வர்த்தக சங்கம், சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
அதன்படி இன்று 3000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சில தனியார் வாகனங்களும் இயங்கவில்லை. எஸ்எஸ்பி லட்சுமி சவுஜன்யா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இதுவரை ரூ.15 கோடி வரையிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
The post மீனவர் போராட்டத்துக்கு ஆதரவு: காரைக்காலில் 3 ஆயிரம் கடைகள் அடைப்பு appeared first on Dinakaran.