மீனவர் பிரச்சனை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ்

3 hours ago 1

டெல்லி: மீனவர் பிரச்சனை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் அளித்துள்ளார். தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை படையால் கைது செய்யப்படுவது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி திமுக நோட்டீஸ் அளித்துள்ளார். இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு மட்டும் இலங்கை கடற்படையால் 530 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டு 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை சிறைகளில் தற்போது 97 மீனவர்கள் உள்ளனர்; தமிழ்நாட்டைச் சேர்ந்த 216 படகுகள் இலங்கை வசம் உள்ளது. மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

The post மீனவர் பிரச்சனை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் appeared first on Dinakaran.

Read Entire Article