மீண்டும் பாமக தலைவராகிறாரா அன்புமணி? - முடிவுக்கு வருகிறதா அப்பா - பிள்ளை நிழல் யுத்தம்?

1 month ago 4

பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் எடுத்த அதிரடியானது பாமக-வுக்குள் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. கட்சியின் பொருளாளர் திலகபாமா, ‘பாமக ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. அய்யாவின் இந்த முடிவு தவறு’ என முகநூலில் பகிரங்கமாக வெடித்தார். அவருக்கு கடுமையாக ரியாக் ஷன் காட்டிய பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், ‘நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி மருத்துவர் ராமதாஸை வசை பாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவது தான் அவருக்கு நல்லது’ என்று அனல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இதனிடையே, ‘பொதுக்​குழு​வால் தலை​வ​ராக தேர்வு செய்​யப்​பட்ட என்னை ஒற்றை அறிக்​கை​யின் மூலம் நீக்​கி​விட முடி​யாது. நானே பாமக தலை​வ​ராக தொடர்​கிறேன். 2026-ல் பாட்​டாளி சொந்​தங்​கள் விரும்​பும் வலி​மை​யான கூட்​ட​ணியை மருத்​து​வர் அய்யா அவர்​களது வழி​காட்​டு​தலுடன் அமைக்க வேண்​டியது எனது பெரும் கடமை​யாகும்’ என அன்​புமணி​யும் அறிக்கை ஒன்றை வெளி​யிட்​டது பாமக-​வினரை மேலும் குழப்​பத்​தில் ஆழ்த்​தி​யுள்​ளது.

Read Entire Article