
நேபிடாவ்,
மியான்மரில் 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளாக வீட்டு சிறையில் உள்ள அவரது 80-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை கோலாகலமாக கொண்டாட அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர்.
எனவே அவரை கவுரவிக்கும் விதமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழ்த்து வீடியோக்கள் அவரது ஆதரவாளர்களால் சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டன. இது கடந்த 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம் ஆகும். அதேபோல் ஆங் சான் சூகியை சிறையில் அடைத்த ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.