மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது: தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு

3 hours ago 2

சென்னை: மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். இதுகுறித்து சென்னை, தலைமை செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் தமிழ்நாடு மிகப்பெரிய தொழில் வளர்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது.

இந்த ஒரு ஆண்டில் மட்டும் 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கான உற்பத்தி தமிழ்நாட்டில் நடந்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையை தமிழ்நாடு தொழில்துறை தொழிலாளர்களின் அற்புதமான உழைப்பில் தொழில் முதலீட்டாளர்களின் மேற்பார்வையில் தமிழ்நாடு கண்டிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை வெற்றிபெற்று விட்டால் அவர் அப்படியே விட்டு விடுவதில்லை. அடுத்த இமாலய இலக்கை எப்படி அடைய வேண்டும் என்பதை அன்றே நிர்ணயித்து விடுவார். நிச்சயமாக நாம் 100 பில்லியன் டாலரை தொட வேண்டும் என்ற உத்தரவை முதல்வர் அளித்துள்ளார்.

அதனால்தான் மின்னணு உற்பத்தியில் அடுத்த இலக்கு, அதாவது ஒரு மின்னணு பொருட்கள் தயாரிக்க சின்ன சின்ன பொருட்கள் தேவை. ஒன்றிய அரசும் ஒரு மின்னணு உற்பத்தி திட்டத்தை சில வாரங்களுக்கு முன் அறிவித்துள்ளார்கள். இதையடுத்து அடுத்தக்கட்டத்துக்கு போக வேண்டும் என்றால், தொழில்முனைவோர்களுக்கு என்னென்ன தேவைப்படும் என்பதை ஒன்றிய அரசு நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு, கேட்டு தெரிந்து கொண்டோம். இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, தமிழ்நாடு மின்னணு உற்பத்தி சிறப்பு திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அறிவித்து இருக்கிறார். துறையின் சார்பாக எங்களது நன்றியை முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன்மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என்பதால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு அறிவித்துள்ள அந்த திட்டத்துக்கு இணையான, அதாவது அவர்கள் என்ன கொடுக்கிறார்களோ அதை நாமும் கொடுப்போம். இந்த திட்டத்தை வேற எந்த மாவட்டத்திலும் அறிவிக்கவில்லை. மற்ற மாநிலத்துக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்றால், தமிழ்நாடு ஒரு திட்டத்தை அறிவித்து ஊக்கத்தொகை அளிக்கும் என்றால் அதை இதுவரை கொடுக்காமல் இருந்ததில்லை. அதனால்தான் முதலீட்டாளர்கள் ஆர்வமாக வருகிறார்கள்.

மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் முதலீடு செய்து, அது வளர்ச்சி அடைந்து பலன் கிடைப்பதற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆகும். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ரூ.1.25 லட்சம் கோடி அளவிற்கான மின்னணு பொருட்கள் உற்பத்தி நடைபெற்றது. மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்க முடியும். சுமார் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் முதல் மாநிலமாக மின்னணு உதிரி பாகங்கள் சிறப்பு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். 100 மில்லியன் டாலர் இலக்கை தொட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எந்த முதலீடுகளையும் திடீரென்று கொண்டு வந்து இறக்க முடியாது. முதலீட்டாளர்களுக்கு நம்பகத்தன்மை உள்ள காரணத்தினால் தமிழ்நாட்டை நோக்கி அதிக முதலீடுகள் வந்துள்ளன. முதலீட்டாளர் எந்த முறையில் யோசிக்கிறார்களோ, அதே வழியில் அரசாங்கம் யோசித்தால்தான் முதலீடுகளை ஈர்க்க முடியும். இந்தியாவின் மின்னணு உற்பத்தியில் 41.23 சதவீதம் தமிழ்நாட்டிடம் இருக்கிறது. அப்படி செயல்படும் ஒரு மாநிலத்தை கண்டிப்பாக ஒன்றிய அரசும் ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழகத்தை பொறுத்தவரை எந்த ஒரு நல்ல முதலீடுகளையும் ஈர்க்க நமது முதல்வர் தயாராகவே இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

The post மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது: தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article