மதுரை, ஏப்.3: மதுரையில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது மின் இணைப்பில் மின் கணக்கீடு செய்ததில் ஏதேனும் குளறுபடி, பழுதடைந்த மீட்டர், உங்கள் பகுதியில் பழுதான மின்கம்பங்கள் உள்ளதா அல்லது குறைந்த அழுத்த மின் பிரச்சனை உள்ளதா அதற்கு தீர்வுகாணும் நோக்கில், கீழ்கண்ட இடங்களில் மின்பயனீட்டாளர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மதுரை கிழக்கு உதவி மின் ெபாறியாளர் அலுவலகம், திருமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகம் திருமங்கலம், சமயநல்லூர் செயற்பொறியாளர் அலுவலகம் சமயநல்லூர், உசிலம்பட்டி செயற்பொறியாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் வருகிற ஏப்.5ம் தேதிகாலை 11 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது என புதூர் மின்வாரிய மேற்பார்வையாளர் பத்மாவதி தெரிவித்துள்ளார்.
The post மின் நுகர்வோர் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.