மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு முற்றிலும் கைவிட அன்புமணி வலியுறுத்தல்

5 hours ago 3

சென்னை: அனைத்து வகை மின் இணைப்புகளுக்கும் மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும் போது, அதிலிருந்து வீட்டு இணைப்புகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வீடுகளைத் தவிர கடைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிற மின் இணைப்புகள் அனைத்துக்கும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதை அனுமதிக்க முடியாது.

Read Entire Article