மிசோரமில் ரூ.86 கோடி போதைபொருள் பறிமுதல்: 2 மியான்மர் நாட்டினர் கைது

3 months ago 11

அய்ஸால்: மிசோரமில் 2 தனித்தனி சம்பவங்களில் ரூ.86 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில், 2 மியான்மர் நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிசோரம் மாநிலத்தில் மியான்மர் எல்லையை ஒட்டி தியாவ் என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே சந்தேகத்துக்கு இடமான வகையில் பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அசாம் ரைபிள்ஸ், போலீசார் இணைந்து நேற்றுமுன்தினம் சோதனை நடத்தினர்.

அப்போது கடத்தல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த சோதனையில் இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த 28.52 கிலோ மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ.85.56 கோடியாகும் என போலீசார் தெரிவித்தனர். அதே மாவட்டத்தில் நடந்த சோதனையில் 52 கிராம் மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் மியான்மரை சேர்ந்த ஒரு ஆண் மற்றும் பெண் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளின் மதிப்பு ரூ.39 லட்சம் ஆகும்.

The post மிசோரமில் ரூ.86 கோடி போதைபொருள் பறிமுதல்: 2 மியான்மர் நாட்டினர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article