மாவட்டத்தில் பரவலாக மழை

8 months ago 30

தர்மபுரி, அக்.26: தர்மபுரியில் நேற்று முன்தினம் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை முதல் இரவு வரை தர்மபுரி மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் விடிய விடிய மழை பெய்ததால், குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கியது. தொடர் மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: தர்மபுரி-9, பாலக்கோடு-2, மாரண்டஹள்ளி-7, பென்னாகரம்-3, ஒகேனக்கல்-18.4, அரூர்-17.4, பாப்பிரெட்டிப்பட்டி- 40, மொரப்பூர்- 10 என மொத்தம் 106.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

The post மாவட்டத்தில் பரவலாக மழை appeared first on Dinakaran.

Read Entire Article