மாலி நாட்டில் பணியாற்றி வந்த இந்தியர்கள் 3 பேர் கடத்தல்

22 hours ago 3

மேற்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடு மாலி. இங்குள்ள கெய்ஸ், நியோரோடு சஹேல், நியோனா உள்ளிட்ட 7 நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது பயங்கரவாதிகள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மாலியில் உள்ள காயேஸ் பகுதியில் உள்ள வைர தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 3 இந்தியர்கள் கடத்தப்பட்டு உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இந்தியர்களை கடத்திய பயங்கவராதிகள் அல்குவைதா பயங்கரவாதிகளின் ஆதரவு பயங்கரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது. இந்தியர்கள் கடத்தப்பட்டதை மத்திய அரசு உறுதி செய்து, அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது:

மாலி நாட்டில் உள்ள பமாகோ பகுதியில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. கடத்தப்பட்ட இந்தியர்களின் குடும்பங்களுடன் பேசி வருகிறோம். இந்த சம்பவத்தை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. கடத்தப்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மாலி அரசை கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article