மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை 2-வது நாளாக சோதனை: ரூ.8 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக தகவல்

3 months ago 15

சென்னை: சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள், ரூ.8 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின், லாட்டரிச் சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்பனை செய்ததன் மூலமாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை சுமார் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அவர் முதலீடு செய்திருப்பதாகவும் எழுந்த புகாரின் பேரில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

Read Entire Article