சென்னை: சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில், பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் மார்ச் 27, 29 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டைக்கு மார்ச் 27, 29 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.40, காலை 10.15, நண்பகல் 12.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு அதே தேதிகளில் காலை 10.30, முற்பகல் 11.35, மதியம் 1.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.