மாயமான மீனவரின் உடல் 3 நாட்களுக்கு பிறகு கச்சத்தீவு கடல் பகுதியில் மீட்பு

5 hours ago 3

மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றபோது, நடுக்கடலில் படகு மூழ்கியதில் மாயமான மீனவரின் உடல், 3 நாட்களுக்குப் பிறகு கச்சத்தீவு கடல் பகுதியில் மீட்கப்பட்டது.

கடந்த 18-ம் தேதி காலை மண்டபத்தைச் சேர்ந்த சர்புதீன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, கடல் சீற்றம் காரணமாக படகின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு மூழ்கியது. இதில் படகின் ஓட்டுநர் இப்ராஹிம் ஷா (40) உள்ளிட்ட 4 மீனவர்கள் கடலில் குதித்து தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள், கடலில் தத்தளித்தவர்களில் 3 பேரை காப்பாற்றினர். ஆனால், இப்ராஹிம் ஷா மட்டும் மாயமானார்.

Read Entire Article