மாயனூர் காவிரி கதவணையில் நீரின் அளவை கணக்கிடும் பணி தீவிரம்

2 months ago 10

 

கிருஷ்ணராயபுரம், நவ. 16: கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவணையில் இருந்து பிரிந்து செல்லும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலை திருச்சி நீர்வளத்துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவணையில் இருந்து பாசனத்திற்காக 4 வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்றது. இதன் மூலம் ஆயிரம் கணக்கான விவசாய நிலங்கள் சாகுபடி செய்கின்றனர்.

இதில் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு மாயனூரில் இருந்து கடைநிலை தஞ்சாவூர் வரை சரிவர சென்றடைகிறதா? என்பதை ஆய்வு செய்யும் பணியை திருச்சி மண்டல நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரா கலா அறிவுரைப்படி உதவி பொறியாளர் தியாகராஜன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாயனூர் காவிரி கதவணையில் உள்ள புதிய கட்டளை மீட்டு வாய்க்காலில் தண்ணீரின் அளவை கணக்கிட்டு ஆய்வை தொடங்கினர்.

The post மாயனூர் காவிரி கதவணையில் நீரின் அளவை கணக்கிடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article