வேலூர், மே 19: காட்பாடி அருகே துணி துவைத்த தகராறில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாமனாரை கத்தியால் வெட்டிய மருமகன் கைது செய்யப்பட்டார்.காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜி(48). இவரது மகள் அர்ச்சனா(26). அர்ச்சனாவின் கணவர் ராஜ்குமார் (38). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். மேல்தள வீட்டில் அர்ச்சனா, தனது கணவருடன் உள்ளார். அர்ச்சனாவின் தாய் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனல் அதேபகுதியை சேர்ந்த கணவரை இழந்த பெண்ணை ராஜி, 2வது திருமணம் செய்துள்ளார். இதனை அர்ச்சனா ஏற்காமல் தொடர்ந்து தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்த வீட்டை தனது பெயருக்கு எழுதித்தரும்படி கேட்டு வந்தாராம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அர்ச்சனா கீழ்தளத்தில் துணிகளை துவைத்துள்ளார். அப்போது அங்கு வந்த ராஜி, கால் தவறி விழுந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மகளிடம் மேல்தளத்தில் துணி துவைக்க வேண்டியதுதானே? என கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அர்ச்சனா தனது தந்தையை கட்டையால் தாக்கினாராம். மேலும் ராஜ்குமாரும், மாமனார் ராஜியை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ராஜியை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காட்பாடி போலீசில் ராஜி அளித்த புகாரின்பேரில் எஸ்ஐ மணிகண்டன் வழக்குப்பதிந்து ராஜ்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அர்ச்சனாவிடம் விசாரித்து வருகின்றனர்.
The post மாமனாரை கத்தியால் வெட்டிய மருமகன் கைது appeared first on Dinakaran.