மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை ஆய்வு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் அறிவிப்பு

6 months ago 19

சென்னை: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர்-செயலர் வின்சென்ட் நேற்று வெளியிட்ட அறிக்கை: அறிவியல் தொழில்நுட்ப மாநிலம் மன்றம், கல்லூரி ஆய்வு மாணவர்களுக்கான ‘‘அறிவியல் ஆய்வு நிதியுதவி பற்றாக்குறையை களையும் திட்டம்” என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், கல்லூரிகளில் படிக்கும் முழுநேர பிஎச்டி ஆய்வு மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் ஆய்வு உதவித்தொகையும், இதர செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ.30 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

ஆய்வு மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழ்களில் குறைந்தபட்சம் 2 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்திருக்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி பெற கல்லூரிகளில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க நவம்பர் 30ம் தேதி கடைசி நாள். கூடுதல் விவரங்களை www.tanscst.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை ஆய்வு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article