மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

6 months ago 24
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை எஸ்டேட்டில் இருந்து வெளியேற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரிக்கப்பட்டது. இதில் அனைத்து தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மாஞ்சோலை எஸ்டேட் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்ட பிறகு, தொழிலாளர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை, பி.பி.டி.சி. நிறுவனம் அறிவித்தது. ஆனால், தேயிலை தோட்டத்தை தமிழக அரசின் 'டான்டீ' நிறுவனம் நடத்தக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read Entire Article