மாகாளிக் கிழங்கு நன்மைகள்

15 hours ago 2

நன்றி குங்குமம் தோழி

தமிழில் மாகாளிக் கிழங்கு, மாகாணிக் கிழங்கு, பெருநன்னாரி என்ற பெயர்களில் அழைக்கப்படும் இக்கிழங்கு உண்மையில் ஒரு வேர் ஆகும். இது மலையில் விளைந்தால் மாகாணி, அதுவே நாட்டில் விளைந்தால் நன்னாரி என்று பழமொழியே உள்ளது.

* சரும ஒவ்வாமைக்கான மருந்தாகவும் மாகாளிக் கிழங்கு செயல்படுகிறது.

* சித்த மருத்துவத்தில் மாகாளி, பல தைலங்களிலும் லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப்படுகிறது.

* இதிலுள்ள சில வேதிப்பொருட்கள் மூட்டு வலியைக் குறைக்க உதவும்.

* மாகாளிக் கிழங்கு, வேர் வகையைச் சேர்ந்தது என்பதால் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ரத்தக்கட்டு, வாதம், காயம், ரத்தச்சோகை, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கான மருந்துகளுடன் சேர்க்கப்படுகிறது.

* மாகாளியை 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரை அரை கப் காலை, மாலை குடித்து வர, நீரிழிவு நோய் விலகும்.

* உடலுக்கு ஊட்டத்தையும் உள்ளத்துக்கு உற்சாகத்தையும் அளிக்கக்கூடிய இயல்பு மாகாளிக் கிழங்குக்கு உள்ளது.

* மாகாளிக் கிழங்கின் இலைகளை சாப்பிட்டு வந்தால், உடலில் வியர்வை நாற்றம் விலகி விடும்.

* மாகாளிக் கிழங்கு, நச்சுகளை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

* மாகாளிக் கிழங்கை உலர வைத்து பொடித்து, ஒரு கப் பாலில் ஒரு ஸ்பூன் பொடியை கலந்து குடித்துவர உடல் உஷ்ணம் குறைந்து, குளிர்ச்சி அடையும்.

* மாகாளிக் கிழங்கு பசியை அதிகரிக்கும். செரிமானப் பிரச்னைகளை சரிசெய்ய உதவும்.

தொகுப்பு: ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

 

The post மாகாளிக் கிழங்கு நன்மைகள் appeared first on Dinakaran.

Read Entire Article