மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு தடுப்புகள்: அமைச்சர் சேகர்பாபு உறுதி

2 hours ago 2

சென்னை: “சென்னை மாநகரப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக” அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பில் துறைமுகம் தொகுதியில் ரூ.6 கோடியில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ், பல்நோக்குக் கட்டிடம், நவீன பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பல்வேறு தெருக்களுக்கு பெயர்ப்பலகைகள் பொருத்துதல் உள்ளிட்ட புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ராயபுரம் மண்டலம் பேரக்ஸ் சாலையில் இன்று (செப்.30) நடைபெற்றது. மேயர் ஆர்.பிரியா முன்னிலையில் நடைபெற்ற நிழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்தார்.

Read Entire Article