மறைமலை அடிகளாரின் பேத்தி வீடு கேட்டு தஞ்சை ஆட்சியரிடம் மனு: உரிமை தொகையும் கிடைக்கவில்லை என புகார்

7 months ago 22

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வழங்கக் கோரி, தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளின் பேத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.

தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளின் மகன் மறை.பச்சையப்பன். இவரது மனைவி காந்திமதி. இவர்களின் மகள் லலிதா(43). பி.காம் பட்டதாரியான இவர், தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் ரா.செந்தில்குமார்(52) மாவு மில் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.

Read Entire Article