சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்ற ‘மருத்துவர் தினம் 2025’ நிகழ்வில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவத் துறையில் மகத்தான பணியாற்றிய 50 மருத்துவர்களை பாராட்டி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எழிலன் நாகநாதன், சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் எம்.விஜயலட்சுமி, மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தலைவர் பி.உமா மகேஸ்வரி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநர் தேரணிராஜன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.