மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்

2 months ago 8

நீடாமங்கலம், டிச. 5: சென்னையிலிருந்து மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் நாள்தோறும் 5.22 மணிக்கு நீடாமங்கலம் வருவது வழக்கம். நேற்று காலை 5.33 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்து மூன்றாவது நடை மேடை பகுதியில் நின்றது. அதேசமயம் மன்னார்குடியிலிருந்து -திருப்பதி செல்லும் பாமணி எக்ஸ்பிரஸ் ரயில் 5.28 மணிக்கு நீடாமங்கலம் வருவது வழக்கம். நீண்டநேரமாக திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் வரவில்லை.வழக்கத்திற்க்கு மாறாக திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6.11 மணிக்கு நீடாமங்கலம் வந்து முதல் நடைமேடை பகுதியில் வந்து நின்றது. நீடாமங்கலத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச்சென்றது. மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலும் மன்னார்குடி நோக்கிச்சென்றது.

The post மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம் appeared first on Dinakaran.

Read Entire Article