மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற தொழிலாளி... குடும்ப தகராறில் விபரீதம்

5 hours ago 2

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி செட்டியார் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 60). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கஸ்தூரி (52). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாகேந்திரன், வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து கஸ்தூரி மீது ஊற்றி தீவைத்தார். அப்போது, தீ பரவி கஸ்தூரி அலறினார். கஸ்தூரி மீது ஊற்றிய பெட்ரோல் நாகேந்திரன் மீதும் பட்டது. அவர் மீதும் தீப்பற்றியது. உடனே அவர் வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயத்துடன் கிடந்தார்.

உயிரோடு கஸ்தூரி கொளுத்தபட்டதை அறிந்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் கஸ்தூரி உடல் கருகி பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காரியாபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நாகேந்திரனை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கஸ்தூரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article