மத்திய அரசைக் கண்டிக்க எடப்பாடி பழனிசாமிக்கு துணிவு உள்ளதா? - செந்தில்பாலாஜி கேள்வி

1 week ago 4

சென்னை,

மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என பகிரங்கமாக மத்திய கல்வி மந்திரி மிரட்டி இருக்கிறார். 'தமிழ்நாட்டு மக்களை பிளாக் மெயில் செய்யும் நோக்கோடு திமிராக நடந்தால் தமிழ்நாட்டு மக்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்' என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலிம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் தமிழ்நாட்டு உரிமைகளில் அக்கறையும் கொண்ட அனைவரும் மத்திய பாஜக அரசின் தடித்தனத்தை எதிர்த்து வருகிறார்கள். வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டு, தனிப்பட்ட பிரச்சினைகளைக் கூட மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக திரித்து திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் எடப்பாடி பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார்?.

சிறு சிறு விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மாநில பிரச்சினைக்கு குரல் கொடுக்க வேண்டாமா?. இந்த விவகாரத்திலாவது டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் நேரடியாய் பதில் சொல்லும் துணிவுள்ளதா பதுங்குக்குழி பழனிசாமிக்கு?. இரு மொழிக் கொள்கையே தாரக மந்திரம் என்பதை கொள்கை முழக்கமாக முழங்கிய பேரறிஞர் பெயரை வைத்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் என கூறிக்கொண்டு மத்திய பாஜக அரசை கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தயவு செய்து அண்ணாவின் பெயரை விட்டுவிட வேண்டும்.

எதிரிகள் மட்டுமல்லாது துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article