“மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு நிதி கொண்டு செயல்படுத்துகிறோம்” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

2 weeks ago 2

சிவகங்கை: “மத்திய அரசு திட்டங்களையும் மாநில அரசு நிதியை செலவு செய்து செயல்படுத்தி வருகிறோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இன்று (ஜன.22) அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் வரவேற்றார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முதல்வருக்கு செங்கோல் வழங்கினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. ரூ.51.37 கோடியில் 46 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதில் சிவகங்கை அருகே நகரம்பட்டியில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட விடுதலை போராட்ட வீரர் வாளுக்குவேலி சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.

Read Entire Article