மதுரையில் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் 4,000 ஊழியர்கள்: இரவுப் பணிக்கு 20 மீட்புக் குழுக்கள் நியமனம்

6 months ago 30

மதுரை: மதுரை மாநகரில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் இரவுப் பணிக்கு மண்டலம் வாரியாக 20 மாநகராட்சி மழை மீட்புக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மழை பெய்யும்போது பாதாளச் சாக்கடை அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்வதற்கு நிபுணத்துவம் பெற்ற 60 பாதாளசாக்கடை ஊழியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாகநகராட்சிப் பகுதியில் கடந்த 3 நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பழைய மாநகராட்சியின் 72 வார்டுகளில் உள்ள சாலைகள், பாதாளச் சாக்கடை, மழைநீர் கால்வாய்களில் ஏற்கெனவே, போதுமான மழைநீர் வடிகால் வசதிகள் இல்லை. தற்போது இந்த கட்டமைப்பை போர்கால அடிப்படையில் மறுசீரமைப்பு செய்து, பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

Read Entire Article